இந்திய இளைஞர் இலங்கையில் கைது

266 0

imagesசட்டவிரோதமாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுச் செல்ல முற்பட்ட சுமார் 16 லட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இந்திய இளைஞர் ஒருவரே கட்டுகாநாயக்க வானுர்தி தள சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 2.40 அளவில் 28 வயதான குறித்த இளைஞர் ஸ்பயிஸ் ஜெட் வானூர்தி சேவைக்குச் சொந்தமான வானூர்தி மூலம் சென்னை நோக்கி பயணமாக இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 300 கிராம் நிறையுடைய 3 தங்க பிஸ்கட்டுக்கள் சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.