மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழ் மக்களின் பாரம்பரிய ‘தைத்திருநாள் விழா 2017’

352 0

unnamed (1)தைத்திருநாள், தைப்பொங்கல் விழா நிகழ்வொன்று மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழர்களால் கடந்த 14-01-2017 சனிக்கிழமையன்று விக்ரோரியா Ashcroft park வில்லியம்ஸ் லேண்டிங் என்னுமிடத்தில் காலை 10.00 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரை இடம்பெற்றது.

நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் நாடு மற்றும் சமய வேறுபாடுகளை கடந்து மிகவும் உணர்வுபூர்வமாகவும், உற்சாகத்துடனும் பங்குகொண்டனர்.

காலை 10 மணிக்கு மண்பானை வைத்து கலாச்சார முறைப்படி ஆரம்பித்த பொங்கல் நிகழ்வு ‘விந்தம்’ தமிழ்ப்பாடசாலை மாணவர்களது தைவணக்க நிகழ்வுகளுடன் சிறப்பாக ஆரம்பித்தது.

அதனை தொடர்ந்து தமிழர் பண்பாட்டு விளையாட்டுக்களான சிலம்பாட்டம், உறியடித்தல், கயிறிழுத்தல் ஆகிய விளையாட்டுகள் நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர்கள், யுவதிகள் மற்றும் முதியவர்களால் பாகுபாடின்றி மிகவும் உற்சாகத்துடன் விளையாடப்பட்டது.

அத்துடன் சிறுவர்களுக்கான குறுந்தூர ஓட்டம், பலூன் உடைத்தல் ஆகிய விளையாட்டுக்களும் சிறப்பாக நடைபெற்றன.

மெல்பேரண் மேற்குவாழ் இளைஞர்களால் இந்த தைப்பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

unnamed (12) unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7) unnamed (8) unnamed (9) unnamed (10) unnamed (11) unnamed (12) unnamed