அரசியல் பழிவாங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி பௌத்த பிக்குகளையும் விட்டுவைக்கவில்லை-; நாமல் ராஜபக்ஸ

254 0

imagesஅரசியல் பழிவாங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி பௌத்த பிக்குகளையும் விட்டுவைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஸ, அரசியல் பழிவாங்கல்கள் பௌத்த பிக்குகளையும் விட்டுவைக்கவில்லை என்று கூறினார்.

விமல் வீரவங்சவுக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சமனாக பிரதியமைச்சரும் குற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சர் சட்டத்தில் சிக்காமல் இருப்பதும், விமல் வீரவங்ச சிறையில் அடைக்கப்பட்டதும் அரசியல் பழிவாங்கலாகவே கருத முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்திற்கு எதிரானவர்களை மட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு கட்டமாக விமல் வீரவங்சவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை சிறையில் அடைந்ததை குறிப்பிட முடியும் என்று நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.