முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், ஓட்டுத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மக்கள் கோரிக்கை (காணொளி)

335 0

Oddusuddan-tile-factoryமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான், ஓட்டுத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை, இதுவரை மீள அமைக்கப்படாமல் காணப்படுவதுடன், இதனை மீள ஆரம்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழிற்சாலை இதுவரை மீள ஆரம்பிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

குறித்த ஓட்டுத்தொழிற்சாலையினை மீள ஆரம்பிக்கும் போது ஒட்டுசுட்டான் பகுதிகளைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொழில்வாய்ப்பினைப் பெற்று நன்மையடைக்கூடியதாக இருக்கும் எனவும் இதனை மீள இயங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிகவும் தரமான ஓடுகளை உற்பத்தி செய்யும் பழமை வாய்ந்த குறித்த தொழிற்சாலை

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக செயழிலந்த பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழிற்சாலை இதுவரை மீள ஆரம்பிக்கப்படாமல் காணப்படுவதாகவும் இதனை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாhறும் அப்பகுதி மக்கள் பொது அமைப்புக்கள் எனப்பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.