வவுனியாவில், பாராளுமன்ற உறுப்பினர் சிவகச்தி ஆனந்தனுக்கும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல் (காணொளி)

314 0

 

vavuniவவுனியாவில், பாராளுமன்ற உறுப்பினர் சிவகச்தி ஆனந்தனுக்கும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

வவுனியா நயினாமடு பொது நோக்கு மண்டபத்தில் இ;டம்பெற்ற இக் கலந்துரையாடலில், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக வறட்சி மற்றும் நீர்பிரச்சனை, விவசாயத்திற்கான நஸ்டஈடு தொடர்பாகவும், இதன்போது பொது மக்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.இந்திரராசா, எம். தியாகராசா உட்பட பலர் கலந்து கொண்டனர்.