அடுத்தடுத்துக் கரையொதுங்கும் சடலங்கள்! – தமிழக மீனவர்களுடையதா?

241 0

வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் இரு நாள்களில் 3 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. சிதைவடைந்த நிலையில் உள்ள அந்த சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.

இன்று (28) நெடுந்தீவில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. மீனவர்கள் சடலத்தைக் கண்டு பொலிஸாரிடம் தெரித்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சடலம் சிதைவடைந்திருந்த நிலையில் காணப்படுகின்றது என்றும், சடலம் அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, நேற்று இரு சடலங்கள் கரையொதுங்கியிருந்தன. வல்வெட்டித்துறை மற்றும் மணற்காடு கடற்கரைகளிலேயே இந்தச் சடலங்கள் கரையொதுங்கியிருந்தன. அந்தச் சடலங்களும் சிதைவடைந்திருந்த நிலையில் உள்ளதால் அடையாளம் காண்பது சிரமமாகியுள்ளது.

நேற்றும், இன்றும் கரையொதுங்கிய சடலங்கள் ஆண்களுடையவை. அதேநேரம் இந்த மாதம் காரைநகரிலும் ஒரு ஆணின் சடலம் கரையொதுங்கியிருந்தது. அந்தச் சடலம் கடலில் காணாமல் போன தமிழக மீனவர் ஒருவடையது என்று அடையாளம் காணப்பட்டிருந்தது.

அடுத்தடுத்து கரையொதுங்கும் சடலங்களால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.