சிறுவனை வீட்டிலிருந்து அடித்து விரட்டிய தாய் கைது!

196 0

12 வயது மகனை வீட்டில் இருந்து அடித்து விரட்டிய குற்றச்சாட்டில் தாய் ஒருவர் கொடிகாமத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்து சிறுவன் நேற்று (27) இரவு விரட்டப்பட்ட நிலையில் தாய் இன்று (28) மதியம் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பெண்ணின் கணவர் இரு மாதங்களுக்கு முன்னர் காலமாகியுள்ளார். நேற்று இரவு வீட்டில் இருந்த மகனை தாய் வீட்டில் இருக்க வேண்டாம் என்று அடித்து விரட்டியுள்ளார்.

இரவு முழுவதும் வீதியில் நின்ற சிறுவன் இன்று காலை கொடிகாமம் பொலிஸ் நிலையம் சென்று இது தொடர்பில் முறையிட்டார் கூறப்படுகின்றது.

விசாரணைகளின் பின்னர் இன்று மதியம் கொடிகாமம் பொலிஸார் தாயைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவிததனர்.

இந்த மாத முற்பகுதியில் தாயின் தாக்குதலுக்கு உள்ளாகி சிறுவன் சுமார் ஐந்து நாள்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றான் என்றும் கூறப்படுகின்றது.