இஸ்ரேல் – பலஸ்தீன சமாதான பேச்சு வார்த்தை மீண்டும்

359 0

a3072-israel-palestine_mapமுறிவடைந்துள்ள இஸ்ரேல் – பலஸ்தீன சமாதான பேச்சு வார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகத்தினால் பிரான்ஸ் தலைநகர் பெரிசில் இதற்கான பேச்சு வார்த்தை இடம்பெறுகின்றன.

இந்த கலந்துரையாடலில் 70 உலக நாடுகளின் பிரநிதிகள் பங்குகொள்கின்றனர்.

இவர்கள் பலஸ்தீன பிரச்சினைகளுக்கு இரண்டு நாடுகளின் தீர்வுகளை ஏற்றுள்ளனர்.

இந்த சமாதான பேச்சுவார்த்தையை பலஸ்தீனத்தின் வரவேற்றுள்ள அதேவேளை, இது தமக்கு எதிராக சர்வதேச சக்திகள் ஒன்றிணைவு என இஸ்ரேஸ் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த பேச்சு வார்த்தையில் பலஸ்தீனத்தினதோ அல்லது இஸ்ரேலினதோ பிரநிதிகள் எவரும் பங்குகொள்ளவில்லை.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்குமான நேரடி சமாதான பேச்சு வார்த்தை கடந்த 2014ஆம் ஆண்டு முறிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.