வறட்சியான காலநிலையால் அரசாங்கத்திற்கு மேலதிக செலவுகள் அதிகரிப்பு

614 0

downloadவறட்சியான காலநிலை காரணமாக அரசாங்கத்திற்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக அரசாங்கத்திற்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எவ்வித தடைகள் வந்தாலும் அதற்காக உரிய தயார் நிலையில் அரசாங்கம் உள்ளதாகவும், இதற்காக மக்களின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வறட்சி காரணமாக நாடு பூராகவும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்களின் விளைச்சலை காப்பாற்ற முடியாத நிலை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வயல் நிலங்களின் விளைச்சலை மீட்டெடுப்பதற்கு முடிந்தளவு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி தொடர்பாக, சவாலான நிலை தோன்றியுள்ளதாக துப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.