8 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார் சிறில்

247 0

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சலே வழங்கிய முறைப்பாடு தொடர்பில், அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, இரண்டாவது தடவையாக இன்று (16) 8 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் வாக்குமூலம் வழங்கியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று (15) காலை 9.45 மணியளவில் வருகை தந்த அவர், மாலை 6.30 மணியளவில் வாக்கு மூலம் வழங்கிவிட்டு வெளியேறியதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

நேற்றையதினமும் அருட்தந்தை சிறில் காமினி, 07 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், விசாரணைக்கு அழைத்த போதிலும், அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.