கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஐந்து நாட்களாக எரிபொருள் இல்லாமையினால் பெரும் சிரமத்திற்கு உட்படுவதாக சாரதிகள் விசனம் (காணொளி)

388 0

eriporulகிளிநொச்சி, பரந்தன் சந்தியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கம் ஒன்றின் ஆளுகைக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஐந்து நாட்களாக எரிபொருள் இல்லாமையினால் பெரும் சிரமத்திற்கு உட்படுவதாக சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான சந்தியாக அமைந்துள்ள, பரந்தன் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை எதிர்பார்த்தே சிற்றூர்தி சாரதிகள் முதல் பார ஊர்தி சாரதிகள் வரை பயணிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த எரிபொருள் நிலையத்தில் கடந்த ஐந்து நாட்களாக எரிபொருள் இல்லாமையால் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் அற்றுப்போவது இது முதல்தடவை அல்ல எனவும் மாதமொன்றில் குறைந்தது இரண்டு மூன்று நாட்கள் எரிபொருள் அற்றுப்போவதானால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் எரிபொருள் அற்றுப் போவதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை என தெரிவிக்கும் வாகன சாரதிகள் இதற்கான ஒரு தீர்வினை பெற்றுத் தருமாறும் கேட்டுள்ளனர்.