ஆர்ப்பாட்டத்துக்கு வருவோரை பொலிஸார் திருப்பியனுப்புகின்றனர்

141 0

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் பல இடங்களில் இருந்து கொழும்பை நோக்கி வரும் பஸ்கள், இடைநடுவில் வைத்தே திருப்பியனுப்பப்படுகின்றன.

கொழும்புக்குச் செல்வதற்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்தாமையால், பஸ்கள் திருப்பியனுப்பப்படுகின்றன என பொலிஸார் தெரிவிக்கின்றன.

கொழும்புக்கான சகல வீதிகளிலும் ​பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் கொழும்புக்குச் செல்வதற்கு அனுமதியளிக்கப்படுகின்றன.