அருட்தந்தை சிறில் காமினி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட தரப்பினர் வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில், அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
அதற்கமையவே விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம், அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
முன்னதாக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக அவகாசம் கோரியிருந்த நிலையில், அவர் தற்போது அங்கு ஆஜராகியுள்ளார்.