லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை திரு இருதயநாதர் தேவாலயத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த இருதயநாதரின் திருவுருவச்சிலை மற்றும் லிந்துலை தபால் நிலையம் நேற்று இரவு இனந்தெரியாதோரால் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸ் தெரிவித்தனர் .
தலவாக்கலை டயகம பிரதான வீதியில் நாகசேனை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.