ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவில் நிலவி வரும் கடுமையா பனிப் பொழிவின் காரணமாக பலர் உயிரிழப்பு

286 0

download (6)ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவில் நிலவி வரும் கடுமையா பனிப் பொழிவின் காரணமாக 60 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு இல்லாதவர்களும், வயோதிபர்களுமே அதிகளவில் உயிரிழந்திருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீடு இல்லாதவர்களுக்கு பாடசாலைகளில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த முகாம்களுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் போலாந்தில் ஏற்பட்ட கடுமையான பனிப் பொழிவு காரணமாக 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மீண்டும் கடுமையான பனிப்பொழிவு இன்று இரவிலிருந்து பிரான்சின் பெரும் பகுதிகளைத் தாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தின் இறுதி வரை இந்தக் குளிர் மற்றும் பனிப்பொழிவு ஏற்படும் என அந்நாட்டின் பெரும் பகுதிக்கு வானிலை அவதானிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றிலிருந்து இருந்து திங்கட்கிழமை வரை இந்தப் பனிப்பொழிவு நீடிக்கலாம் என்றும் அந்த நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.