சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் ஈழத்திலும் விஸ்தரிக்கும் நோக்கில் நடவடிக்கைகள்

237 0

download-13நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் தனது சேவையினை ஈழத்திலும் விஸ்தரிக்கும் நோக்கில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.ராதகிருஸ்ணன் அகரம் பவுண்டேஷன் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வறுமையில் இருக்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்காக கொண்டு கடந்த 2006ஆம் ஆண்டு அகரம் பவுண்டேஷன் ஆரம்பிக்கப்பட்டது.

அகரம் பவுண்டேஷனின் வருடாந்த ஒன்று கூடல் அண்மையில் இடம்பெற்ற நிலையில், அதில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.ராதகிருஸ்ணன் அவர்களும் கலந்துகொண்டார்.

இதன் போது அகரம் பவுண்டேஷன ஈழத்தில் செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இது குறித்து ஆராயும் நோக்கில் அகரம் பவுண்டேஷனின் குழுவொன்று விரைவில்க்கு ஈழத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது