பஸ்ஸின் மிதிபலகையில் சென்றவர் பாதையில் விழுந்து மரணம்

219 0

149844255accidenttபொலன்னறுவை, வெலிகந்தை பிரதேசத்தில் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்றில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – பொலன்னறுவை இடையே பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ்ஸின் முன்பக்க மிதிபலகையில் பயணித்த ஒருவரே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த குறித்த நபர் வெலிக்கந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிகந்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதுதவிர, மஹியங்கனை, மானம்பிட்டிய வீதியில் அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானம்பிட்டிய, நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி, அருகில் இருந்த பஸ் தரிப்பிடத்தில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தெஹியத்தகண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அரலங்வில, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.