பஸ்தரிப்பு நிலையம் மற்றும் கோட்டைப் பகுதியில் சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகளை பொலிஸார் கண்காணிக்க வேண்டும்- கௌதமன் (காணொளி)

278 0

bus-and-fortயாழ்ப்பாணத்தில் பஸ்தரிப்பு நிலையம் மற்றும் கோட்டைப் பகுதியில் சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகளை பொலிஸார் கண்காணிக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் சிறுவர் மகளிர் விவகார பகுதியை சேர்ந்த கௌதமன் தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் பஸ் தரிப்ப நிலையத்தில் மாலை, இரவு நேரங்களில் பெண்களின் மீது ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தல், பெண்களை துன்புறுத்துகின்ற பாலியல் ரீதியான வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெறுகின்றன என பல முறைப்பாடுகள் பொதுமக்கள் மூலம் தமது காரியாலயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்

அத்துடன் கோட்டைப் பகுதியில் சிறுவர்கள் துஸ்பிரயோகங்களும், இளைஞர் யுவதிகளின் தவறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டி இவ் இரு இடங்களையும் பொலிஸார் தமது கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.