மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் விடுதலை(காணொளி)

293 0

kathiஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டு இரண்டு வருட  பூர்த்தியை முன்னிட்டு விசேட மன்னிப்பில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் இரண்டு வருட பதவியேற்பினை சிறப்பிக்கும் முகமாக சிறப்பு  நிகழ்வுகள் இன்று இடம்பெற்று வருகின்றன.

இந் நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பர்   பணிப்புரைக்கு அமைவாக சிறைச்சாலையின் பிரதான சிறைச்சாலை அதிகாரி  என்.பிரபாகரன் தலைமையில், சிறு குற்றங்களுக்கு சிறைத்தண்டனை  விதிக்கப்பட்ட இரண்டு சிறைக்கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து சிரமதான பணிகளும் இடம்பெற்றன. இந்த சிரமதான பணிகளில் மட்டக்களப்பு சிறைச்சாலை புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள், சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள், சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.