மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பு நிகழ்வுகள்(காணொளி)

367 0

manmunaiஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்று இரண்டு வருட  பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலக வளாகத்திலுள்ள ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து செயலக வளாகத்தில் மரநடுகை நிகழ்வு சிரமதான பணிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  எஸ்.யோகராஜா, பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.யதிஸ்குமார், பிரதேச செயலக கணக்காளர் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலக உத்தியோகாத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.