அதிகாரத்தை பெற்று கொள்ளும் செயற்பாடு ஒரு போதும் நிழலாகாது – நாமல்

330 0

Namal_Rajapaksa-720x480அதிகாரத்தை பெற்று கொள்ளும் செயற்பாடு ஒரு போதும் நிழலாகாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சூரியவௌ பிரதேசத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஒவ்வொரு அமைச்சரவையிலும் நிலவும் குறைப்பாடுகள் மற்றும் அநீதிகளை ஆராய்ந்து குரல் எழுப்பவே நிழல் அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.

இது அமைச்சரவை அல்ல.

அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டுமாயின் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.