வடகொரியாவால் நடத்தப்பட்ட பலிஸ்டிக் ஏவுகணை பரிசோதனை தோல்வி

367 0

1468064341_4661163_hirunews_North-Korean-submarine-ballistic-missileவடகொரியாவால் நடத்தப்பட்ட பலிஸ்டிக் ஏவுகணை பரிசோதனை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய இராணுவம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை பரிசோதனை வடகொரிய சின்போ துறைமுகத்தில் நடத்தப்பட்டது.

இந்த வருடத்தில் வடகொரியாவினால் பல அணு ஆயுத பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் ஹைட்ரஜன் குண்டுகள் அடங்கிய ஏவுகணையை பரிசோதனையை செய்திருந்தது.

இதற்கு தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.