ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றில் தாயும், மகனும் சடலமாக மீட்பு (காணொளி)

356 0

omenவவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து தாயும், மகனும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் வீதியில் அமைந்துள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து இளம் தாய் ஒருவரும், அவரது 7 வயது மகனும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சதீஸ்வரன் சுதாசினி, 7 வயதுடைய சதீஸ்வரன் டினோஸன் ஆகியோரே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் வசித்து வந்த உயிரிழந்த பெண்ணின் மாமியார், கிராம அலுவலர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

மாமனார் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டு நின்றுள்ளார். கணவன் வேலை நிமிர்த்தம் கிளிநொச்சிக்கு சென்றிருந்தார்.

இதன்போது குறித்த தாயும், மகனும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

கிராம அலுவலர் அலுவலகத்திற்கு சென்ற மாமியார் காலை 11 மணியளவில்  வீட்டிற்கு வந்து பார்த்த போது தாயையும், மகனையும் காணவில்லை. இதனையடுத்து அவர்களை தேடியபோது, குறித்த இருவரது சடலமும் வீட்டுக்கிணற்றில் இருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஓமந்தைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.