அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்களின் போராட்டம் தொடர்கிறது.

243 0

increase_your_chances_of_winning_the_lottery_2அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள் இன்றும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை 20 ரூபாவிலிருந்நது 30 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள் நேற்று முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இருப்பினும், அரசாங்கத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாத விற்பனையாளர்களுக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை இன்றும் முன்னெடுப்பதாக அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.