பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 159 பேர் கைது

270 0

arrest_1_0_mini-720x480நீதிமன்றத்தைப் புறக்கணித்த நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 159 பேர் கடந்த சில தினங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை காவல்துறை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாரிய குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 54 பேர் இதில் உள்ளடங்குகின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.