எல்லை வேலியை குடியேறிகள் தகர்க்க முயற்சி

239 0

01மொராக்கோ மற்றும் ஸ்பெயினில் உள்ள ஷியோட்டா பகுதிக்கு இடையில் உள்ள எல்லை வேலியை ஆயிரத்திற்கும் அதிகமான ஆப்பிரிக்க குடியேறிகள் தகர்த்துக் கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.

இதன்போது இடம்பெற்ற மோதல் நிலைமையால் ஸ்பெயினைச் சேர்ந்த ஐந்து காவல்துறை அதிகாரிகளும் மொராக்கோவைச் சேர்ந்த ஐம்பது பாதுகாப்புப் படையினரும் காயமடைந்துள்ளதாக சர்வதேசச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இரண்டு பேர் சிகிச்சைக்காக ஷியோட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும், மற்றவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் மாட்ரிட் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவின் ஒரு பகுதியாக இருக்கும் குறித்த பிராந்தியத்தின் ஊடாக ஐரோப்பாவில் நுழைவதற்காக சுமார் ஆயிரத்து 100 ஆபிரிக்க மக்கள் நேற்று முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.