குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சரத் குமார குணரத்னவுக்கு விளக்கமறியல்

279 0

sarath_gunartna_11_05_02-626x380குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் சரத் குமார குணரத்ன எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மோசடி சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னாள் அமைச்சர் சரத் குமார குணரத்ன இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.