புதையல் தோண்டியவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

332 0

D03030fdபுதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை – கோமரன்கடவல – தாடுல்வெவ வனப்பகுதியில் கைது செய்யப்பட்ட 6 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாடுல்வெவ வனப்பகுதியில் நேற்று புதையல் தோண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது சந்தேகத்துக்குரியவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் பூஜைக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் சிலவற்றையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.