மவுஸ்ஸாக்கலை நீர்தேக்க பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு.

278 0

543825031body-fullநல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோகினி எல்ல நீர்வீழ்ச்சிக்கு கீழ் பகுதியில் உள்ள மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கம் சங்கமிக்கும் இடத்தில் கரை ஒதுங்கிய நிலையில் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் நேற்று மாலை 5 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, இன்று காலை மீட்கப்பட்டதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நீர்தேக்க பகுதியில் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியில் மீன் பிடிக்க சென்றவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு, சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மரண விசாரணைகளின் பின் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.