இந்த சூழ்நிலையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால் ஒரு நாடாக டெல்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக மாறிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத், தற்போதைய நிலைமையை மீளாய்வு செய்து,அதை சமநிலைப்படுத்த முடியாவிட்டால் முடிவொன்றை எடுக்க வேண்டியிருக்கும் என நேற்று தெவித்தமை குறிப்பிடத்தக்கது.