யாழில் பிறந்து 17 நாள்களேயான பச்சிளங்குழந்தைக்கு தொற்று!

238 0

யாழ்ப்பாணத்தில் பிறந்து 17 நாள்களேயான பச்சிளங்குழந்தை ஒன்றுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் குழந்தைக்கு நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.