உஸ்பகிஸ்தான் நாட்டு பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் கைது!

173 0

உஸ்பகிஸ்தான் நாட்டு பெண் ஒருவரை இந்நாட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌ்ளவத்த பகுதியை சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட குறித்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணுக்கு 36 வயது எனவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவரின் மனைவியும் உஸ்பகிஸ்தான் நாட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.