உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வழக்கு

231 0

f0df007704b10ad2a1a9ab0faf131c20_xlஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எல்லை நிர்ணய குழு மற்றும் மாகாண சபைகள் அமைச்சு என்பவற்றுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக கெபே அமைப்பு அறிவித்துள்ளது.

அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போட்டு வரும் மோசடி மிக்க நடவடிக்கைக்கு எல்லை நிர்ணயக் குழு ஆதரவு வழங்கி வருவதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்

கடந்த 27 ஆம் திகதி எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை அமைச்சுக்கு வழங்குவதற்கு தீர்மானமாகியிருந்த போதிலும், அது ஒப்படைக்கப்படுவதற்கு தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.