மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகர் பிரிவில் உள்ள  மதுபானசாலைகளை மூடுமாறு கோரி, மக்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

290 0

batti-manmunaippattu-prostedமட்டக்களப்பு மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகர் பிரிவில் உள்ள  மதுபானசாலைகளை மூடுமாறு கோரி, பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற ஒன்றியங்களின் இணையத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மண்முனை பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மக்கள் குடியிருப்புக்கள் , கோவில்கள் , பாடசாலைகளுக்கு அருகாமையில்  காணப்படுவதால்  குறித்த மதுபானசாலைகள் காணப்படுவதால், தினமும் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மண்முனைப்பற்று -ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள மதுபானசாலையால் தினமும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அந்த மதுபானசாலையை அகற்றுவதற்கு  நடவடிக்கை எடுக்குமாறு கோரியபோதும் இதுவரையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இங்குள்ள மதுபானசாலைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை உரிய அதிகாரிகள் எடுக்காது போனால்   தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப்படும் என இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரை மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் மற்றும் ஆர்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

இந்த ஆர்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் , கிழக்குமாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்  தெரிவிக்கையில் மதுபான சாலைகளை மூடுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று மட்டக்களப்பு  மண்முனைப்பற்று பிரதேச மக்கள் அணி திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

மதுவற்ற தேசத்தை உருவாக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதியவர்கள் மற்றும் அதனோடு தொடர்புபட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இது விடயத்தில் அக்கறை எடுத்து இந்த மதுபான சாலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபையிலிருக்கின்ற எமது மாகாண சபை உறுப்பினர்கள் இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளோம்.

மதுபான சாலைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூடுவதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்க விருக்கின்றோம்.

வெளிமாவட்டங்களில் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொண்டு இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான சாலைகளை திறப்பதை கட்டுப்படுத்துவதற்கும் அதை தடுத்து நிறுத்துவதற்குமான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு எமது கட்சி முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம் என இதன்போது  தெரிவித்தனர்.