மட்டக்களப்பு வடமுனை பிரதேசத்திலுள்ள வீரான்டவில் பகுதியிலுள்ள ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட 14 பேரை இன்று செவ்வாய்க்கிழமை (06) விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் 14 உழவு இயந்திரங்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பகுதிக்கு சம்பவதினமான இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினருடன் மாவட்ட புலனாய்வு பிரிவினர் ஒன்றினைந்து முற்றுகையிட்டனர். இதன்போது சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்ததுடன் 11 உழவு இயந்திங்களையும் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைந்தனர்.
இதேவேளை சட்டவிரோ மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேரை பொலிசார் கைது செய்ததுடன் 3 உழவு இயந்திரங்களையும் மீட்டனா.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாழசை;சேளை பொலிசார் தெரிவித்தனர். .

