அமீரகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,552 ஆக குறைந்தது

269 0

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 483 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டது.

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 483 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன் முடிவுகளில் 1,552 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 42 ஆயிரத்து 601 ஆக உயர்ந்தது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஒரு நாளில் 1,518 பேர் குணமடைந்ததால், தற்போது அமீரகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 20 ஆயிரத்து 812 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 4 பேர் பலியானார்கள். இதனால் அமீரகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,843 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 19 ஆயிரத்து 946 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.