மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட ஐவர் கைது

251 0

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயற்பாட்டாளர்களான சமந்த வித்தியாரத்ன மற்றும் நாமல் கருணாரத்ன ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 1ஆம் திகதியன்று ​பொரலந்த பகுதியில் இடம்பெற்ற, விவசாய ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே அவ்விருவருக்கும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, பெருந்திரளான மக்களை ஒன்றுதிரட்டி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.