யாழ்ப்பாண பாடசாலை மாணவர்களுக்கு வெள்ளிப்பதக்கங்கள்

261 0

sports-28-12-2016-2யாழ்ப்பாண பாடசாலை மாணவர்கள் இருவர் தென்னாசிய பாடசாலைகளுக்கிடையிலான பழுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

தென்னாசிய பாடசாலைகளுக்கிடையிலான பழுதூக்கும் போட்டி மலேசியா கோலாலம்பூரில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற 20 வயதுப்பிரிவின் கீழ் நடைபெற்ற ஆண்களுக்கான பழுதூக்கும் பழுதூக்கும் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் வெள்ளிப்பதக்கங்களை வென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி எஸ்.விஸ்ணுகாந்த் மற்றும் யாழ்ப்ப்பாணம் இந்துக்கல்லூரி ஏ.எட்றின்வூட் ஆகிய இரு மாணவர்கள் குறித்த பழுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன் எஸ்.விஸ்ணுகாந்த் 77 கிலோகிராம் எடைப்பிரிவில் ஸ்னற்ஜ் முறையில் 105 கிலோகிராம் எடையும், க்ளீன் அன்ட் ஜேர்க் முறையில் 120 கிலோகிராம் எடையும் சேர்த்து மொத்தமாக 220 கிலோகிராம் எடையை தூக்கி வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் ஏ.எட்றின்வூட் 85 கிலோகிராம் எடைப்பிரிவில் ஸ்னற்ஜ் முறையில் 95 கிலோகிராம் எடையும், க்ளீன் அன்ட் ஜேர்க் முறையில் 110 கிலோகிராம் எடையும் சேர்த்து மொத்தமாக 205 கிலோகிராம் எடையை தூக்கி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.

sports-28-12-2016-2 sports-28-12-2016-1