நாட்டில் நீதித்துறை தொடர்பாக மக்கள் மத்தியில் மிகப் பெரிய கேள்விக்குறி- கி.துரைராஜசிங்கம்

256 0

thurairajasingam-28-12-2016-02நாட்டில் நீதித்துறை தொடர்பாக மக்கள் மத்தியில் மிகப் பெரிய கேள்விக்குறி ஏற்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாலர் பாலர்பாடசாலை ஆசிரியர்களின் வினைத்திறன் கண்காட்சி நிகிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், நாட்டில் நீதித்துறை தொடர்பாக மக்கள் மத்தியில் மிகப் பெரிய கேள்விக்குறி ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

தேசம் சார்ந்த இனம் சார்ந்த வழக்குகள் வரும்போது அவை விசேட நீதிமன்றின் ஊடாக நடத்தப்பட்டால் மட்டும்தான் நாட்டில் நீதியை எதிர்பார்க்க முடியும் என்று தாம் நினைப்பதாகவும் அது முடிவல்ல என்றும் அமைச்சர் கி.துரைராஜசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கில் இடம்பெற்ற குமாரபுரம் படுகொலை, தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஸ் தொடர்பான வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எல்லோரும் சாட்சிகளால் அடையாளப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டும் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறினார்.