வவுனியா கற்பகபுர மக்ளுக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டது (காணொளி)

494 0

vavu-landவவுனியா கற்பகபுரத்தில், 350 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனால், இன்று காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கற்பகபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், பாண்ட் வாத்தியங்கள் முழங்க நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், ஆரம்ப நிகழ்வாக வரவேற்புநடனம் நிகழ்த்தப்பட்டதுடன், வவுனியா பிரதேச செயலாளரினால் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனின் உரையை தொடர்ந்து, கற்பகபுரம் மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன்,

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கு பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

வவுனியாவில் உள்ள மக்களுக்கு இன்னும் தொடர்ச்சியாக காணிகளை வழங்குவோம்.

அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் 10 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் வீடுகள் தேவைப்படுவோர் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனத்தெரிவித்தார்.