தொண்டராசிரியர்களால், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று உணவு தவிர்ப்பு போராட்டம்(காணொளி)

384 0

thondarவடக்கு மாகாண பாடசாலைகளில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றி வரும் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதை உறுதிப்படுத்துமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீண்டகாலமாக கிளிநொச்சி முல்லைத்தீவு வுவுனியா மன்னார் பாடசாலைகளில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றுபவர்களே இன்று உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் கிளிநொச்சியில் ஒன்றுகூடிய தொண்டராசிரியர்கள் தங்களது நியமனங்கள் தொடர்பாக உறுதியான முடிவில்லாத காரணத்தினால் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் வடக்குமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தொண்டராசிரியர்களால் நடாத்தப்பட்ட போராட்டத்தின் போது இவ்வருட இறுதிக்கிடையில் நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு

நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சுமத்தி இன்றையதினம் காலை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.