தென்பகுதியிலிருந்து செயற்கை முறையில் நொதிக்கப்பட்ட கள்ளு வடக்கு மாகாணத்தில் விற்பனை செய்வதை தடைசெய்ய வேண்டும் (காணொளி)

387 0

npதென்பகுதியிலிருந்து செயற்கை முறையில் நொதிக்கப்பட்ட கள்ளு வடக்கு மாகாணத்தில் பனை தென்னை விற்பனை கூட்டுறவுச் சங்கங்களில் விற்பனை செய்வதை தடைசெய்ய வேண்டும் என வடக்கு மாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 74ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றபோது தென்பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் செயற்கை முறையில் நொதிக்கப்பட்ட கள்ளை தடைசெய்ய வேண்டும் என்ற தீர்மானம் வடக்கு மாகண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனால் கொண்டுவரப்பட்டு, சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.