மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பாடசாலை வீதி பகுதியில் கொள்ளை (காணொளி)

321 0

ggமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஜெயந்திபுரம் பாடசாலை வீதியை சேர்ந்த சிவலிங்கம் புவனேஸ்வரி வயது 59  தனது வீட்டில்  தனிமையில் இருந்த பொழுது இன்று முற்பகல் 11.30. மணியளவில் வீட்டுக்குள் புகுந்த  இனம் தெரியாத நபர்களால்  கூறிய ஆயுதத்தை காட்டி மிரட்டி அவருடைய இரண்டு பவுன் நிறைரையுடைய  தங்க மாலையினை  கொள்ளையிட்டு சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக   பொலிசார் தெரிவிக்கின்றனர் .

குறித்த சம்பவத்தினால் அதிர்ச்சியுற்ற குறித்த பெண் மயக்கமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்திய சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்

குறித்த  சம்பவம் தொடர்பாக  சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு பெரும்குற்ற பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும்  மாவட்ட குற்றதடவியல் பொறுப்பதிகாரி கே .ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்வருகின்றனர்.