புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 06 பேருக்கு துவிச்சக்கரவண்டி

280 0

cycle-help-27-12-2016-2மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆண்டான்குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாடசாலையில் இடம்பெற்றதுஇ குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் அந்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 06 பேருக்கு துவிச்சக்கரவண்டி பரிசாக தருவதாக வாக்களித்திருந்தார்.

அந்த வகையில் தனது 2016 ஆம் ஆண்டிற்கான பிராமண அடிப்படையிலான மூலதன நன்கொடை (ஊடீபு) நிதியில் இருந்து துவிச்சக்கரவண்டியை கொள்வனவுசெய்து 26-12-2016 திங்கள் மாலை 3:30 மணியளவில் குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த செல்வி.சிவலோகநாதன் காருணிகா அவர்களுக்கு அமைச்சர்  அவர்கள் துவிச்சக்கரவண்டியை மன்னாரில் உள்ள உப அலுவலகத்தில் வைத்து வழங்கிவைத்தார்இ அத்தோடு குறித்த மாணவிக்கு தேவையான கல்விக்கான உதவிகளை தம்மால் இயன்றவரை செய்துதருவதாகவும்இ சிறப்பாக தொடர்ந்து சாதனைகள் பல படைக்கவேண்டும் என்றும் வாழ்த்துத் தெரிவித்தார்.

cycle-help-27-12-2016 cycle-help-27-12-2016-2