வவுனியாவில் கோர விபத்து, பெண் வைத்தியர் உட்பட மூவர் பலி!

253 0

download-14வவுனியா நாவற்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண் வைத்தியர் உட்பட மூவர் பலியாகியுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சுகாதாரப் பிரிவிற்குச் சொந்தமான ராட்டா வகை பிக்கப் வாகனமும், வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பாரவூர்தியும் நேருக்குநேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரு பெண் வைத்தியர் உட்பட இரண்டு பெண்களும் ஆணொருவரும் பலியாகியுள்ளனர்.

புத்தளம் வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றும் ரி.எம்.ஏ. சுதேசிகா, அவரது கணவரான முகமது சபூர், மாமனாரான வவுனியாவின் பிரபல வர்த்தகர் சப்ரின், அவரது மனைவி மலீனா ஆகியோர் பயணித்த வாகனமே இந்த விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியரின் கணவரே படுகாயங்களுக்குள்ளாகி வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரவூர்த்தியின் சாரதி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.