எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இன்று கையளிப்பு

399 0

1135464666untitled-1எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கைகள் நேற்றைய தினத்துடன் முழுமையடைந்துள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் தலைவர் அஷோக பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இன்று அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் இதனை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், பைசர் முஸ்தபா வௌிநாடு சென்றுள்ளதால், குறித்த அறிக்கையை இன்று, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சின் செயலாளர் அல்லது இராஜாங்க அமைச்சரிடம் கையளிக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, அமைச்சர் அந்த அறிக்கையை பொறுப்பேற்ற பின்னர் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல்கள் செயலகத்திற்கு வாய்ப்பு கிட்டும் எனவும் கூறப்படுகின்றது.