தொடருந்தில் குண்டு புரளி

266 0

imagesகொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்க இருந்த இரவு அஞ்சல் தொடருந்தில் குண்டு இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த தொடருந்து விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பொது மக்கள் தொடருந்தில் இருந்த இறக்கப்பட்டு, சுமார் ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக, சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்பொருட்டு காவல்துறையின் விசேட படையணி மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு என்பன பணியில் ஈடுபட்டனர்.

கோட்டை காவல்துறையினருக்கு இவ்வாறு குண்டு தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

எனினும் அவ்வாறு எந்த சந்தேகத்திற்கு இடமான பொருளும் கிடைக்கப்பெறவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தொடருந்து தாமதமாகிய நிலையில் தமது பயணத்தை ஆரம்பித்ததாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.