தமிழக மீன்வர்கள் விரைவில் விடுதலை – அமைச்சர் அமரவீர

344 0

7இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்களும்; விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமவீர தெரிவித்துள்ளார்.

இவர்களை விடுவிப்பதற்கான கோரிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் தாம் முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர் எனினும் அவர்களது கடற்தொழில் உபகரணங்கள் அனைத்தும் பரிமுதல் செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனவரியில் இடம்பெறவுள்ள இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலில் சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.