சிவில் விமான சேவையில் இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பு

291 0

419557552nimalஎதிர்காலத்தில் சிவில் விமான போக்குவரத்து சேவை அதிகாரசபையின் பதவிகளுக்கு தொழில்நுட்ப அறிவுடைய இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ள இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்படுவதாகவும், விரிவடைகின்ற விமான சேவை துறைக்கு இளைஞர் யுவதிகள் அவசியம் என்றும் அமைச்சர் கூறினார். சிவில் விமான சேவை அதிகாரசபைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இன்று சிவில் விமான சேவை அதிகாரசபையின் உயர் பதவிகளில் தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்கும் அதிகாரிகளின் பற்றாக்குறையானது, அதிகாரசபை எதிர்நோக்கியுள்ள பிரதான சவால் என்று அமைச்சர் இங்கு கூறியுள்ளார். சிவில் விமான சேவை அதிகாரசபைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட விமான போக்குவரத்து பரிசோதகர்கள் 13 பேர் மற்றும் உதவி முகாமையாளர்கள் 12 பேருக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.