மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 கைதிகளுக்கு கொரோனா

320 0

மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒரே நாளில் கைதிகள் 44 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து , இன்று புதன்கிழமை (19) எழுமாறாக சிறைக்கைதிகள் 62 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 44 பேர் கொரோனா தொற்றாளர்ளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

இதனையடுத்து குறித்த தொற்றாளர்கள் 44 பேரும்  தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக் கப்படுவதுடன் அவர்களுடன் நேரடித் தொடர்புடையவர்களையும் சிறைச்சாலையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.